தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories

Join the forum, it's quick and easy

தமிழ் மொட்டுக்கள்
Please login to reply/comment to the stories
தமிழ் மொட்டுக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Go down
Vaaniaravind
Vaaniaravind
New member
New member
Posts : 1
Join date : 2018-12-25

நடுங்கவைக்கும் மர்மக் கொலைகள் Empty நடுங்கவைக்கும் மர்மக் கொலைகள்

Tue Dec 25, 2018 5:20 pm



பட பட பட  என  யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டு  ரவி கதவை திறந்து பார்த்தான்.....

அங்கு யாருமே இல்லை.... இதயம் திக் திக் என படபடக்கத் தொடங்கியது ........

திடீரென கரண்ட் கட் ஆனது மூச்சே  நின்றுவிடும் போல இருந்தது ரவிக்கு......

ஊஊஊஊஊ......

தூரத்தில் எங்கோ நாய்கள் ஊளையிட்டது...
  தட்டுத்தடுமாறி வீட்டில் இருந்த மெழுகு வர்த்தியை ஏற்றினான்.. 

ஒரு நொடி ஏதோ ஒரு கரிய  தீஞ்ச உருவம் ஒன்று  அவன் கண்முன் வந்தது போலிருந்தது........

ரவிக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது....
மீண்டும் கதவை தட்டும் ஓசை கேட்டது.....

வயிற்றுக்குள் ஏதோ பிரள  செய்தது.. 
கதவை திறந்து வெளியில் சுற்றி இருந்த தோட்டத்தை டார்ச் லைட் அடித்து  பார்த்தான்... ஒன்றும் தெரியவில்லை .....

அங்கு இருந்த  சருகுகள் காலில் மிதிபடும் ஓசைகள் சரசரவென கேட்டது.. 

அந்த உருவம் அந்த இருளிலும் ஒரு நொடியில் தோன்றி மறைந்தது அவன் கண்முன்னே..  

அவன்  இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது....   கை கால்கள் நடுங்க தொடங்கியது.... 

முகமெல்லாம் வியர்த்து கொட்டியது.....
தொண்டை வரண்டது ..  

திடீரென  அவன் கழுத்தை யாரோ இருக்கி பிடித்தது  போல இருந்தது...  அவன் கழுத்து பகுதியில் சில்லென ஏதோ வழிந்தது......

அது சூடான ரத்தம்........  அந்த கைகளை எடுப்பதற்காக தொட்டவுடன் ரவியின் கையில் ரத்தம் பிசுபிசுப்பாக ஒட்ட... 

ரத்தமும் தீயில் கருகிப் போன தோலும் கறியுமாக  அவன் கையில் பட .....

நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது.....அவனையும் அறியாமல் ஆஆஆ எனக்கத்த அந்த உருவம் மறைந்தது.....   அலறிக் கொண்டு வேகமாக உள்ளே வந்து கதவை தாழிட்டான்......

தொண்டை வரல மயக்கமே வந்துவிடும் போலிருந்தது ......

தண்ணீர் குடிக்க டம்ளர் எடுக்கும்போதும் கண்ணாடியில் அதே உருவம் மீண்டும் அவன் கண்களுக்கு தென்பட்டது ........




கையிலிருந்த டம்ளர் தண்ணீரோடு  சிதறி விழ....

ஆஆஆஆஆஆ........ 

என்ற பயங்கரமான அலறல் சத்தம் ......
அந்த கும்மிருட்டில் மணி 12.30 ஐத்தாண்டிய வேலையில்  ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டிலிருந்து காற்றோடு கலந்து வந்த  குரல்.....


ஐயோ  !!!!

காப்பாத்துங்க....

யாராவது என்ன காப்பாத்துங்க .......

என்ற ரவியின் குரல்  வீடு முழுக்க எதிரொலித்தது.....

அந்த நள்ளிரவில் நடுங்க வைத்த குரல் யாருக்கும் கேட்கவில்லை ...... கண்ணாடியின் முன் அந்த உருவம் ரவியின் கண்களுக்கு தெளிவாகவே தென்பட்டது ........ஏற்றிய மெழுகுவர்த்தியும் டக்கென்று அணைந்து கீழே விழுந்து விட்டது......


உடல் முழுவதும் கருகி , தீயில் வெந்தும் வேகாமலும், கண்கள் தோண்டப்பட்டு , அந்த இடத்தில் குழிகள் மட்டுமே காணப்பட்டது.........


வெந்த உடலிலிருந்து ஆங்காங்கே ரத்தம் கொப்பளித்து சொட்டத் தொடங்கியது.........

அந்த உருவத்தின் தலையில் முடிகள் எல்லாம் பொசுங்கிப் பாதி வெந்து உள்ளிருக்கும் மூளை சிதைந்தும் ரத்தம் ஒழுக  ரவியைப்  பார்த்து நான் யாருன்னு தெரியுதாடா.....

நான் பேசுறது கேக்குதாடா......
நீ இப்போ சாகப்போற .......
உன்னோட ஆயுசு இன்னையோட முடிந்தது  என வெறியோடு அவன்மீது பாய்ந்தது..  


வேண்டாம் விட்டுவிடு....   தெரியாம பண்ணிட்டேன்.....  அவங்களோட பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்ட ......

மன்னிச்சிடு ...... மன்னிச்சிடு என கெஞ்சினான்....

ரவியின் பேச்சு அதன் காதுகளில் விழவே இல்லை......

அந்த அலறல் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது...... வீட்டில் யாருமே இல்லாத வேலை வெளியில் யாருக்கும் ரவியின் அலறல் கேட்கவில்லை ....


Last edited by Vaaniaravind on Tue Dec 25, 2018 6:40 pm; edited 1 time in total
avatar
SaraThas
New member
New member
Posts : 8
Join date : 2018-12-23

நடுங்கவைக்கும் மர்மக் கொலைகள் Empty Re: நடுங்கவைக்கும் மர்மக் கொலைகள்

Tue Dec 25, 2018 6:18 pm
Able to view images

Sent from Topic'it App
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum